விடுதலை சிறுத்தைகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம்: பு.த.
சென்னை:
தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் உள்பட அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் பிரச்சாரம்செய்யவுள்ளோம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
நாமக்கல்லில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிநிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
திமுகவிலிருந்து மதிமுக போனதால் இழப்பா, அல்லது போனவர்களுக்கு இழப்பா என தேர்தல் முடிவுகள்சொல்லும். இந்த தேர்தலில் மாஞ்சோலைப் பிரச்னையை விட மாட்டோம்.
நாமக்கல்லில் முட்டை மற்றும் லாரித் தொழிலாளர்கள் பிரச்னையையும் கிளப்புவோம். வன்கொடுமைச் சட்டத்தைதவறாகப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு தவறாகப் பயன்படுத்துவோரைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக தான் தமிழகத்தில் வெற்றி பெறும் என்ற மாயை இருந்தது. தற்போது அந்தமாயை அகன்று விட்டது. அதிமுகவின் ஊழலை மக்கள் மறந்து விடவில்லை. தமிழகத்தில்மீண்டும் முதல்வர்கருணாநிதி தலைமையிலான ஆட்சி தான் நடக்கும்.
எங்களது கட்சியைப் பொறுத்தவரை உள்ளூர் மக்களின் மனநிலைக்கு ஏற்ப வேட்பாளர் நிறுத்தப்படுவார்.ஊருக்குள் நல்லவர், வல்லவர் என பெயர் பெற்றவர்களுக்கே இடம் கொடுப்போம்.
நாமக்கல் ஒன்றியத்தில் இதுவரை பல ஒன்றியங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டோம். இங்குள்ள மக்கள்கருணாநிதி ஆட்சியை குறை சொல்லவில்லை. அவர்களுக்கு குடிநீர் மட்டுமே இப்போதைய அடிப்படைத்தேவையாக உள்ளது.
எனவே இதனைத் தீர்க்க முயற்சி செய்வேன். தேர்தல் வாக்குறுதியில் இது இடம் பெறும். மேலும், அனைத்துக்கட்சிகளுக்கும் பொதுவான செயல் திட்டம் இருக்குமானால், அதில் இந்தக் கோரிக்கையை எழுப்புவேன் என்றார்கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications