For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரிசி ஆலை குண்டுவெடிப்பு: அல் உம்மா பாஷா விடுதலை

By Staff
Google Oneindia Tamil News

பூந்தமல்லி (சென்னை):

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை குண்டுவெடிப்பு வழக்கில் பாஷா உள்பட 5 பேர் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே சாலியமங்கலம் என்ற கிராமத்தில் அப்துல் கரீம் என்பவர் அரிசிஆலை நடத்தி வருகிறார். இந்த அரிசி ஆலையில் 7.2.1998 அன்று ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில்இப்ராஹிம், ரபீக், ஷேக் இஸ்மாயில் மற்றும் காவலாளி சீனிவாசன் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷா கைது செய்யப்பட்டார். மேலும் 8 பேரையும் போலீசார் கைதுசெய்தனர்.

அவர்கள் பெயர் விவரம் வருமாறு:

அப்துல் காதர், அப்துல் அமீது, அப்துல் குத்தூஸ், முகமது அலி ஜின்னா, அபுதாகீர், கலீல் பாட்ஷா, அக்தர் பாட்ஷா.

இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அபுதாகீர் கடந்த வருடம் இறந்து விட்டார். இந்த வழக்கு திங்கள்கிழமைவிசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.ராஜமாணிக்கம் கூறிய தீர்ப்பு விவரம் வருமாறு:

அம்மாப்பேட்டை குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அப்துல்காதருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ 1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.அபராதம் கட்டத் தவறினால் 13 மாத ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அப்துல் சலீமுக்கும், அப்துல் குத்தூசுக்கும் 5 ஆண்டு தண்டனையும், ரூ 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.அபராதம் கட்டத் தவறினால் 6 மாதம் ஜெயில் தண்டனையும் அனுபவிக்க வேண்டும்.

அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷா, அப்துல் அமீது, முகமது அலி ஜின்னா, கலீல் பாஷா, அக்தர் பாஷா ஆகிய 5பேர் விடுதலை செய்யப்படுகின்றனர்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X