திமுக, பாஜக உறவை முறிக்க சதி செய்யவில்லை: மதிமுக
கோவை:
திமுகவுக்கும் பாஜவுக்கும் இடையே உள்ள உறவை முறிக்க மதிமுக சதி செய்ததாக முதல்வர் கருணாநதி கூறுவதுமுற்றிலும் தவறு, அந்த எண்ணம் துளி எங்களிடம் இருந்தது இல்லை என கோவையில் மதிமுக பொருளாளர்கண்ணப்பன் தெரிவித்தார்.
கோவையில் நடக்கவிருக்கும் மதிமுக மாநாடு குறித்த ஏற்பாடுகளை மதிமுக பொருளாளார் கண்ணப்பன் செய்துவருகிறார். மாநாட்டுப் பந்தலில் கண்ணப்பன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகம் முழுவதிலும் வரும் சட்டசபைத் தேர்தலில் முதல்வர் கருணாநிதி தான் முதல்வர் என பிரச்சாரத்தில்ஈடுபட்டோம். கட்சிக்காக நிதி திரட்டினோம். தேர்தல் பிரச்சாரம் துவங்கும் முன்னரே அவருக்கு ஆதரவாகப்பிரச்சாரம் செய்தோம். அதற்கான பரிசு தான் எங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை.
பாரதிய ஜனதாக் கட்சிக்கு அதிமுக அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றபோது திமுக ஆதரித்தது. அப்போதுபிரதமர் வாஜ்பாய், எங்களிடம் கேட்டார். நாங்கள் மத்தியில் நிலையான வாஜ்பாய் அரசு கவிழ காரணமாக இருக்கமாட்டோம். திமுகவுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்தாலும், அதற்காக மத்தியில் ஆட்சி தொடர திமுகஅளிக்கும் ஆதரவை ஏற்றுக் கொள்ளும்படி தெரிவித்தோம்.
இப்போது கருணாநிதி, திமுகவுக்கும் பாஜவுக்கும் இடையே உள்ள உறவை முறிக்க மதிமுக சதி செய்வதாகக்கூறியுள்ளார். இது முற்றிலும் தவறு, அந்த எண்ணம் எங்களிடம் துளி அளவு கூட இல்லை. எங்களால் எந்த உறவும்பாதிக்காது.
பாரதிய ஜனதாக் கட்சியை நாங்கள் ஆதரித்து பிரச்சாரம் செய்தாலும் கூட, எங்களுக்கு பாரதி ஜனதாக் கட்சிஆதரித்து பிரச்சாரம் செய்யாது என்பது நாங்கள் அறிந்ததே. இதனால் எங்களுக்கு எவ்வித வருத்தமோ,கவலையோ இல்லை.
தேர்தலுக்குப் பிறகு எங்களுக்கு அளிக்கப்பட்ட அமைச்சர் பதவியை ராஜினமா செய்யக் கோரி திமுகநிர்ப்பந்தித்தால், அதனை வாஜ்பாய் அரசு ஏற்காது.
கோவையில் நடக்கும் மதிமுக மாநாடு முழுக்க முழுக்க மதிமுகவின் மாநாடு. இந்த மாநாட்டிற்கு பிற கட்சித்தலைவர்களையோ, கூட்டணிக் கட்சியினரையோ அழைக்கவில்லை என்றார் கண்ணப்பன்.












Click it and Unblock the Notifications