கொழும்பு நகரில் பெண் புலிகள் ஊடுருவல்
கொழும்பு:
இலங்கையில் தலைநகர் கொழும்பில் முக்கிய அரசியல் பிரமுகர்களைக் கொல்வதற்காக விடுதலைப் புலிகளின்தற்கொலைப் படையைச் சேர்ந்த இரண்டு பெண் புலிகள் ஊடுருவியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்துப் போலீசார் கூறியதாவது:
கொழும்பில் சந்தேகப்படும் விதத்தில் நடமாடிக் கொண்டிருந்த நந்தினி என்ற பெண் புலியைப் பிடித்தோம்.
கொழும்பில் முக்கிய அரசியல் பிரமுகர்களைக் கொலை செய்ய புலிகள் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.மேலும் விசாரணையில் திரிகோணமலையில் மட்டூர் முகாமில் 27 கரும்புலிகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது.இதில் 17 பேர் ஆண்கள். 10 பேர் பெண்கள். அதில் நாங்களும் இரண்டு பேர் என்றார்.
இந்த 27 புலிகளும் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். நந்தினி சமீபத்தில் திரிகோணமலை போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். இவர் கொடுத்த தகவலின்படி இன்னொரு பெண் புலியையும் போலீசார் கைது செய்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications