2 பேருந்துகளுக்கிடையே சிக்கி 2 பெண்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
கோவை:
பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இரண்டு பெண்கள் பேருந்துகளுக்கிடையே சிக்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், விசாலாட்சி (வயது 27), மாசானி (வயது 34) ஆகிய இரண்டு பேரும்பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர்.
அப்போது வேகமாக வந்து கொண்டிருந்த இரண்டு பேருந்துகளுக்கிடையே இவர்கள் சிக்கிக் கொண்டதால் நசுங்கிஉயிரிழந்தனர்.
இந்த மாதம் 8ம் தேதி இதே பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் 65 வயது பெண்மணி மீது பேருந்து மோதியதில்அவர் பலத்த காயமடைந்தார்.
அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றிஇறந்துவிட்டார் என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications