ஓட்டு வேணுமா.. கள்ளு கொடு..

Subscribe to Oneindia Tamil

கோவை:

""மனுஷன் சாராயம் குடிக்கலாம், அதிலும் ரெம்ப பணம் கொடுத்து குடிக்கலாம், கள் குடிப்பதற்கு மட்டும் எதிர்ப்பா?சாராய சம்ராஜ்யத்திற்கென்று ஒரு "லாபி இருக்கிறது, அவர்கள் முதலாளிகள், நாங்கள் வெறும் விவசாயிகள்,கள்ளுக்கடையை திறந்தால் மட்டுமே அவர்களுக்கு ஓட்டு என்கிறார் தென்னை விவசாயிகள் சங்கத் தலைவர்கிருஷ்ணசாமிக் கவுண்டர்.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, தென்னை விவசாயிகள் அதிகம். இந்த தென்னை விவசாயத்தைநம்பியுள்ள விவசாயிகளுகக்கு ஒரு இடியாக விழுந்தது ஈரியோபைட் எனப்படும் பூச்சி தான்.

தேங்காய்களைத் தாக்கி, அதன் வடிவத்தையே சிதைக்கும் இந்த ஈரியோபைட் நோயைக் கட்டுப் படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. எனவே, இப்போது கள்ளுக்கடையை திறக்க வேண்டும் எனக்கோரிக்கையை வைக்கின்றனர் தென்னை விவசாயிகள்.

தென்னிந்திய தென்னை விவசாயிகளின் சங்கத் தலைவராக உள்ள கிருஷ்ணசாமிக் கவுண்டர் கூறுகையில்,

கடந்த ஓராண்டில் ஒன்றரை கோடி தென்னை மரங்கள் ஈரியோபைட் நோயால் பாதிப்படைந்துள்ளன. இந்தப்பாதிப்பைப் போக்க ஒரே வழி, கள் இறக்குவது தான். கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்ற எங்களது நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றப்பட வேண்டும்.

இது குறித்து முதல்வர் கருணாநதியிடம், கள்ளுக்கடை திறக்கப்படுமா என கேட்டபோது, ""அனைத்துக் கட்சிக்கூட்டத்தைக் கூட்டி முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

ஆனால் அது இனி நடக்காது. ஏனென்றால் தேர்தல் அறிவித்த பின்னர் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பதுஇயலாத காரியம். எனவே, தென்னை விவசாயிகளின் நலன் காக்க கள்ளுக்கடையை திறப்போம் என வாக்குறுதிஅளிக்கும் கட்சியினருக்கே நாங்கள் வாக்களிப்போம்.

""மனுஷன் சாராயம் குடிக்கலாம், அதிலும் ரெம்ப பணம் கொடுத்து குடிக்கலாம், கள் குடிப்பதற்கு மட்டும் எதிர்ப்பா?சாராய சம்ராஜ்யத்திற்கென்று ஒரு "லாபி இருக்கிறது, அவர்கள் பெரும் முதலாளிகள், நாங்கள் வெறும்விவசாயிகள், கள்ளுக்கடையை திறந்தால் மட்டுமே அவர்களுக்கு ஓட்டு. சாராயத்தை விட கள் ஒன்றும்மோசமானது இல்லை.

தேங்காய் விளைச்சல் இல்லையென்றால், எண்ணெய் இருக்காது என நீங்கள் கவலைப் பட வேண்டாம். அது தான்இந்தோனேஷியா, மலேசியாவில் இருந்து மடை திறந்த வெள்ளம் போல வந்து கொண்டிருக்கிறதே.

கள்ளுக் கடையைத் திறப்பதைத் தவிர தென்னையைக் காப்பாற்ற மாற்று வழியில்லை. வேண்டுமானால், மிளகு,ஜாதிக்காய் போன்ற ஊடுபயிர் செய்யலாம். இதற்கும் அரசு ஊக்கமளித்து, இலவசமாகக் கன்றுகள் கொடுத்து,மானியம் அளிக்க வேண்டும்.

அவ்வாறு அரசு செய்யத் தவறி விட்டது. இனி அளிப்பதும் இயலாத காரியம் எனவே கள்ளுக்கடையைத் திறப்பதுஒன்றே வழி என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+