ஏப்.16 ல் வேட்பாளர் பட்டியல் வெளியிடுகிறது புதிய தமிழகம்
சென்னை:
ஏப்ரல் 16 ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடவுள்ளதாகவும், ஏப்ரல் 20 ம் தேதி கன்னியாக்குமரியில் தேர்தல்பிரசாரத்தைத் தொடங்கவுள்ளதாகவும் புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது.
திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது புதிய தமிழகம் கட்சி. இந்த கட்சிக்குவரும் சட்டசபைத் தேர்தலில் 10 இடங்களை ஒதுக்கியுள்ளது திமுக.
வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி புதன்கிழமைநிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மே 10 ம் தேதி நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் வண்டி சின்னத்தில் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள்போட்டியிடுவார்கள். கடந்த லோக்சபா தேர்தலிலும் இந்த சின்னத்தில்தான் போட்டியிட்டோம்.
சட்டசபைத் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது ஒரே சின்னத்தில் போட்டியிடுவதா என்பதுகுறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது மக்கள்பிரதிநிதித்துவ சட்டம் தோற்கடிக்கப்பட்டு விட்டது என்பதையே காட்டுகிறது என்றார் கிருஷ்ணசாமி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications