ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா? நீதிபதி இன்று விளக்கம்
சென்னை:
டான்சி வழக்கில் நேற்று (புதன்கிழமை) ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
இதையடுத்து இந்தத் தீர்ப்பு குறித்து இன்று (வியாழக்கிழமை) விளக்கம் அளிப்பதாக நீதிபதி கூறியுள்ளார்.
டான்சி வழக்கில் தான் குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம்நேற்று ரத்து செய்தது. அதே நேரத்தில் இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டிப்பதால் அவர் தேர்தலில் போட்டியிடத் தடையேதும் இருக்காது எனக் கருதுவதாகவும், இது குறித்து தேர்தல்கமிஷன் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிபதி மலை சுப்பிரமணியம் தீர்ப்பளித்தார்.
ஆனால், இதில் குழப்பம் நிலவுகிறது. ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது என அரசுத் தரப்பும், இந்தத் தீர்ப்பினால்,ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட பிரச்சனை இல்லை என ஜெயலலிதாவின் வழக்கறிஞர்களும் தெரிவித்தனர்.
தீர்ப்பு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதையடுத்து இரு தரப்பு வழக்கறிஞர்களும் நீதிபதியை அவரது அறையில் சந்தித்துவிளக்கம் கேட்டனர்.
இதையடுத்து இந்தத் தீர்ப்பில் உள்ள குழப்பத்தைப் போக்கி இன்று விவரம் அளிப்பதாக நீதிபதி கூறியுள்ளார்.
இன்று நீதிபதி அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்துத் தான் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் அனுமதி