வருமானத்துக்கு அதிகமாக சொத்து: முரசொலி மாறன் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்திருப்தாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் முரசொலி மாறனும், அவரது உறவினர்களும் வருமானத்திற்கு அதிகமாக ரூ 1,500 கோடி வரைசொத்து சேர்த்திருக்கிறார்கள். அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் கண்காணிப்புத் துறையின் விசாரணைக்குஉத்தரவிட வேண்டும் என வழக்கு ஒன்று சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த இன்பதுரை என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில், மாறன் குடும்பத்தார் மிகவும்ஏழ்மை நிலையில் இருந்தார்கள். கல்வி கற்க மாறன் கஷ்டப்பட்ட போது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.தான் அவருக்கு உதவி செய்தார்.

இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்கள் வரிசையில் மாறன் நான்காவது இடத்தில் உள்ளார். இவர் சேர்த்துள்ளசொத்தின் மதிப்பு ரூ 400 கோடியாகும். இவரது குடும்பத்தார் சேர்த்துள்ள சொத்தின் மொத்த மதிப்பு ரூ 1,500கோடிக்கு மேல் உள்ளது.

முன்காலத்தில் மாறன் சைக்கிளில்தான் பயணம் செய்து வந்தார். ஆனால் அவர் திடீர் பணக்காரராக ஆகியுள்ளார்.அவர் மீது உள்ள குற்றச்சாட்களுக்கு ஆதாரமாக வீடியோ மற்றும் புகைப்பாட ஆதாரங்தள் சமர்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக முரசொலி மாறன் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும்கண்காணிப்புத் துறை விசாரமைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த மனு செஷன்ஸ் நீதிபதி அசோக்குமார் முன் விசாரணைக்குவந்தது. அவர் இந்த மனு மீதான விசாரணையைஇந்த மாதம் 19ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+