காலையில் வெயில் மாலையில் மழை
கோவை:
காலையில் வெயில், மாலையில் மழை என்ற நிலை கோவையில் உருவாகி வருகிறது. வியாழக்கிழமை மாலையில்பெய்த மழையால், கோவையில் கோடை வெப்பம் கணிசமான அளவு குறைந்துள்ளது.
இதே போன்று நீலகிரி மாவட்டத்திலும் மழை பெய்திருப்பதால், இந்த ஆண்டு சீசன் நல்ல முறையில் இருக்கும்என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கோவையின் காலநிலை மாறி வருகிறது. கொளுத்தும் வெப்பத்தில் மாட்டிக் கொண்டிருந்தகோவை நகர், இப்போது குளிர்ந்துள்ளது. இந்த ஆண்டு கோவை நகரின் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத்தொட்டிருந்தது.
நீலகிரி மாவட்டத்தில் இப்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், பசுமையாகக் காட்சியளிக்கத்தொடங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் இங்கு மலர்கள் பூத்துக் குலுங்க வேண்டும். அதற்காக இப்போதுபெய்யும் மழை மிகவும் அவசியம்.
இந்த நிலையில் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் அங்கு சுமார் 3 மணி நேரம் மழை பெய்தது. இது சீசனுக்குத்துணை புரிவதோடு, தேயிலை மகசூலும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.