இலங்கையில் தமிழ் பெண்களை கற்பழித்தவர்கள் மேல் நடவடிக்கை
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகளின் தற்கொலை படையைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இரண்டு தமிழ் பெண்களைக் கற்பழித்த போலீஸ் மற்றும் கடற்படை வீரர்களைக் கைது செய்யக்கோரி இலங்கை சட்ட அமைச்சர் பேட்டி வீரக்கோன் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, விடுதலைப்புலிகளின் தற்கொலை படையைச் சேர்ந்த பெண்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மன்னார்மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழ்பெண்கள் ஏகாம்பலம் விஜய்காலர் மற்றும் சின்னத்தம்பி சிவமணிஆகியோர் இலங்கை கடற்படை வீரர்களால் கற்பழிக்கப்பட்டனர்.
இவர்கள் முக்கிய பிரமுகர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது இக் கற்பழிப்பு சம்பவம் நடந்தது.
இதையடுத்து இவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கோரி மனித உரிமைக் கமிஷன் மற்றும் பல சமூக நலமையங்கள், கற்பழிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்யும்படியும், அவர்கள் மேல்உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையே இலங்கை சட்ட அமைச்சர் வீரக்கோன், இந்த கற்பழிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீதுஉடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் பாதிக்கப்பட்ட பெண்களால் குற்றவாளிகள் யார் என்பதைஅடையாளம் காட்ட முடியும் என்று கூறியுள்ளார்.
மேலும், கற்பழிக்கப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் கர்ப்பமாக உள்ளார். அவர் ஜாமீனில் வெளியேவிடப்பட்டுள்ளார். இரண்டு பெண்களும் கற்பழிக்கப்பட்டதற்கு போதுமான சாட்சியங்கள் உள்ளன. மருத்துவச்சான்றிதழ்களும் அவர்கள் இருவரும் கற்பழிக்கப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications