தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்திய மூ.மு.க.
சென்னை:
மே மாதம் நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் திருமங்கலம் தொகுதி மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்குஒதுக்கப்பட்டிருப்பதால் தி.மு.க.வினர் அதிருப்தியடைந்துள்ளனர்.
வரவிருக்கும் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இது தி.மு.க.வினருக்குமகிழ்ச்சியை அளிக்கும் செய்தியாக இருந்தது.
ஆனால் சமீபத்தில் வந்து தி.மு.க.கூட்டணியில் இணைந்த மூவேந்தர் முன்னேற்ற கழகத்துக்கு திருங்கலம் தொகுதி ஒதுக்கப்பட்டதுதி.மு.க.வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கட்சி போட்டியிடுவதால் புதிய தமிழகம் ஆதரவாளர்களான தாழ்த்தப்பட்டோர் வாக்குகள் கிடைப்பது கஷ்டம் எனதி.மு.க.வினர் நினைக்கிறார்கள்.
இந்த இரண்டு கட்சியை சேர்ந்த இரண்டு சமுதாயத்தினருக்குமிடையே அடிக்கடி ஏற்பட்டு வரும் மோதலை மறந்து ஓட்டு போடுவார்களாஎன்ற சந்தேகமும் நிலவி வருகிறது.
ஆனால் திருமங்கலத்தில் போட்டியிடும் காளிமுத்துவும் தேவர் இனத்தைச் சேர்ந்தவர்தான் என்பதால் அவருக்கு வாக்களிப்பதற்கு பதில்தி.மு.க ஆதரவு அணிக்கே வாக்களிப்பார்கள் என புதிய தமிழகம் கட்சியினர் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications