தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் கருணாநிதி
சென்னை:
முதல் அமைச்சர் கருணாநிதி, மே 10 ம் தேதி நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை சென்னைசைதாப்பேட்டையில் தொடங்கினார்.
சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. இந்தத் தேர்தலில் திமுக மொத்தம் 167தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதியுள்ள 67 தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணிக்கட்சிகள் போட்டியிடுகின்றன.
தேர்தலையடுத்து திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு தேர்தல்சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார்.
முதல்கட்டமாக 4 நாட்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவர் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
முதலில் சைதாப்பேட்டையில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் சைதை கிட்டுவை ஆதரித்து முதல்வர் கருணாநிதி பேசினார்.
பின்னர் மாலை 3 மணிக்கு ஆலந்தூரில் போட்டியிடும் எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை ஆதரித்துப் பேசுகிறார்.
பின்னர் தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, விழுப்புரம், திண்டிவனம், மதுராந்தகம் ஆகிய ஊர்களில் கூட்டணித் தலைவர்களுக்குஆதரவு திரட்டுகிறார்.
முதல்வர் சுற்றுப்பயண விவரம்:
செவ்வாய்க்கிழமை:
3 மணி - ஆலந்தூர்
4 மணி- தாம்பரம்
5 மணி - கூடுவாஞ்சேரி
6 மணி - செங்கல்பட்டு
7 மணி - மதுராந்தகம்
7.30 மணி - அச்சரப்பாக்கம்
8 மணி - திண்டிவனம்
9 மணி- விக்கிரவாண்டி
10 மணி - விழுப்புரம்
புதன்கிழமை:
மாலை 4 மணி - முகையூர்
5 மணி - திருக்கோவிலூர்
5.30 மணி - மடப்பட்டு
6 மணி - உளுந்தூர்பேட்டை
6.30 மணி திட்டக்குடி
7 மணி - விருத்தாச்சலம்
8 மணி - வடலூர்
8.30 மணி - பண்ருட்டி
9 மணி - நெல்லிக்குப்பம்
10 மணி - கடலூர்












Click it and Unblock the Notifications