மிகவும் மந்தமாக நடந்தது வேட்புமனுத்தாக்கல்
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மிகவும்மந்தமாகவே நடந்தது.
செவ்வாய்க்கிழமை 39 வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்கள். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கானவேட்புமனுத்தாக்கல் கடந்த ஏப்ரல் 16 ம் தேதி தொடங்கியது. இது வரும் ஏப்ரல் 23 ம் தேதி வரை நடக்கவுள்ளது.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 16 ம் தேதி தொடங்கியது. செவ்வாய்க்கிழமைஇரண்டாவது நாளாக வேட்பு மனுத்தாக்கல் நடந்தது.
இதுவரை மொத்தம் 62 வேட்பாளர்கள் சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. இதுவரைஒரே ஒருவர்தான் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications