அதிமுக எம்.பி.வீட்டில் கொள்ளை முயற்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக எம்.பி.மலைச்சாமி வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
சென்னை அண்ணாநகர் ஏசி பிளாக் குடியிருப்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி மலைச்சாமி வசித்து வருகிறார்.
இவர் ஓய்வுபெற்றபின் அதிமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார்.
இதற்கிடையே, திங்கள்கிழமை இரவு இவர் வீட்டு ஜன்னல் வழியே கொள்ளையர்கள் புகுந்தனர். வீட்டினுள்நுழைந்து கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் கொள்ளைக்கும்பல் நினைத்தது போல் அவர்களுக்கு அங்குஎதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அக்கும்பல் அடுத்ததாக உள்ள ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ராஜன் என்பவரது வீட்டுக்குள்நுழைந்தனர். அவர் வீட்டு காரில் இருந்த ஸ்டீரியோவை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பித்துச் சென்று விட்டனர்.












Click it and Unblock the Notifications