ஆண்டிப்பட்டியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார் ஜெ.
ஆண்டிப்பட்டி (தேனி):
தமிழக சட்டசபைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா புதன்கிழமை பிற்பகல் ஆண்டிப்பட்டி தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
அவரது வேட்புமனுவை ஆண்டிப்பட்டி தேர்தல் அதிகாரி பெற்றுக் கொண்டார். முன்னதாக, கடந்த திங்கள்கிழமைஜெயலலிதா கிருஷ்ணகிரி தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
வேட்புமனுத்தாக்கல் இந்த மாதம் 23 ம் தேதி வரை நடைபெறுகிறது. டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் 2ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றுள்ளதால் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா முடியாதா என்பதில்குழப்பம் ஏற்பட்டுள்ளது.
வேட்புமனுக்களை பரிசீலிக்கும் நாள் இம்மாதம் 24 ம் தேதி ஆகும். இரு தொகுதிகளில் வேட்புமனுத்தாக்கல்செய்துள்ள ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது ஏப்ரல் 24 ம் தேதி தெரிந்து விடும்.
ஜெயலலிதாவுக்கு எப்போதுமே ஒற்றைப்படை எண்கள்தான் ராசி. அதனால் கிருஷ்ணகிரியில் 16 ம் தேதியும்(1+6= 7) ஆண்டிப்பட்டியில் 18 ம் தேதியும் (1+8= 9) மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.