ஏப்.23 ல் வேட்புமனுத்தாக்கல் செய்கிறார் கருணாநிதி
சென்னை:
முதல்வர் கருணாநிதி வரும் 23 ம் தேதி சென்னை சேப்பாக்கம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் மே 10 ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் முதல்வர் கருணாநிதி சேப்பாக்கம்தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதற்காக அவர் வரும் 23 ம் தேதி சேப்பாக்கம் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
முன்னதாக, சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை மதியம் முதல்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தைத்தொடங்கினார் கருணாநிதி.
அவர் வரும் 20 ம் தேதி வரை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சூறாவளிசுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
20 ம் தேதி இரவு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு 21 ம் தேதி சென்னைதிரும்புகிறார்.
பின்னர் 23 ம் தேதி சேப்பாக்கம் தொகுதியில் அவர் வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். மறுநாள் 24 ம் தேதி அவர்தனது இரண்டாவது கட்ட தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.