திமுக-மதிமுக மோதலில் சிக்கித் தவிக்கும் பா.ஜ.க.
கோவை:
திமுகவிற்கும் மதிமுகவிற்கும் இடையே மோதல் வலுக்கிறது. இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கிறது பாரதிய ஜனதாக் கட்சி.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளில் திமுகவுடன் எஞ்சி நிற்பது பாரதிய ஜனதாக் கட்சி மட்டும் தான். பாட்டாளி மக்கள்கட்சியில் தொடங்கிய பிளவு, இப்போது மதிமுகவில் முடிந்துள்ளது. எல்லாமே திமுக மீது பழியைத் தூக்கிப் போட்டு விலகிக் கொண்டுள்ளன.
மதிமுக வைப் பொறுத்தவரை 3 இடங்கள் மட்டும் இறுதியாகாத பட்சத்தில் விலகிக் கொண்டது. "மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்றதத்துவம் கூட இப்போது மதிமுகவிற்கு பொருத்தமானதாகி விட்டது.
தேசிய அளவில் கூட்டணி என்று வைத்துக் கொண்டாலும், மாநிலத்தில் தனித்து நின்று போட்டியிட முடிவு செய்தது. இதனால் பாரதிய ஜனதாக் கட்சி நிற்கும்தொகுதிகளில் போட்டியிடாமல் விலகிக் கொண்டது.
பா.ஜ.க. மீதும் வாஜ்பாய் மீதும் பாசம் கொண்ட வைகோ, திமுக வை இப்போது எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இதனால், திமுக மீதுஅடுக்கடுக்கான புகார்களைக் கூறத் தொடங்கியுள்ளார்.
திமுக கூட்டணி ஒரு சாதிக் கூட்டணி என வர்ணித்ததோடு, திமுக வில் 5 ஆண்டு கால ஆட்சியில் என்ன ஊழல் நடந்துள்ளது என்பதை வெளியிடுவோம் எனஅச்சுறுத்தவும் தயங்கவில்லை. இந்த எதிர்ப்பு முதல்வருக்கு சற்றே எரிச்சலை உண்டாக்கியுள்ளது.
இதனால் புதிய சிக்கல்கள் வரத் தொடங்கியுள்ளன. இப்போது மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில், திமுக வா? அல்லது மதிமுக வா? என்றநெருக்கடி நிலையை திமுக தலைவர் கருணாநிதி உருவாக்கியுள்ளார். மதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகியே ஆக வேண்டும் என்பதை அவர்உணர்த்தியுள்ளார்.
கூட்டணியில் இருக்கும் தமிழக பாரதிய ஜனதாக் கட்சி, "தலையாட்டி பொம்மையாகவும், சொல்வதைத் திருப்பிச் சொல்லும் கிளிப் பிள்ளையாகவும்மாறிப் போய் விட்டது. முதல்வரின் விருப்பப்படி அவர்களது அறிக்கையும் வெளிவரத் தொடங்கியுள்ளது.
மதிமுகவுடன் நல்லுறவு நீடிக்கும் எனக் கூறிய பின்பு, தற்போது திமுக, பா.ஜ கூட்டணியை மதிமுக உடைக்கப் பார்க்கிறது. மதிமுகவுடன் உறவு இல்லைஎன்ற பா.ஜ.க.வின் பகிரங்க அறிவிப்பு வெளியாகி விட்டது.
திமுகவின் மிரட்டல் தான் இதற்கு காரணம், பாரதிய ஜனதாக் கட்சி எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள். அவர்களைப் பேச வைப்பதே முதல்வர்கருணாநிதி தான் என வைகோ வெளிப்படையாகவே கூறிவிட்டார். இதனால், பா.ஜவிற்கும் கூட வைகோ மீது அதிருப்தி ஏற்பட்டு விட்டது.
பிரதமர் வாஜ்பாயிடம் நல்ல பெயர் வாங்கினாலும், வைகோவிற்கு தமிழகத்தில் அனுதாபம் சில இடங்களில் பிறந்துள்ளது. இந்த அனுதாபம், திமுக வின்ஓட்டை பெருமளவு பாதிக்கும். இந்த பாதிப்பு அதிமுக விற்குச் சாதகமாக அமையும். வைகோவிடம் இன்றைக்கும் உள்ள ஒரு மைனஸ் மற்றும் பிளஸ்பாய்ண்ட் "புலிகள் ஆதரவு தான்.
திமுக அணியில் விளைந்த குழப்பம் இப்போது அதிகவிற்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்து விட்டது. இப்போது திமுக, மதிமுக களத்தில் நேரடியாக மோதுகிறது.
பாரதிய ஜனதாக் கட்சியோ எப்போதும் சந்தித்திராத தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. பாரதிய ஜனதா மீது ஒரு தலைக் காதல்கொண்டிருக்கும் மதிமுகவிற்கு இது சோதனை காலம் தான்.
மதிமுகவிற்கு ஒரு சில இடங்கள் இந்த தேர்தலில் கிடைத்தாலே அக்கட்சிக்கு அது மாபெரும் வெற்றி!