பெருந்துறையில் கொங்குநாடு கட்சி சார்பில் கோவிந்தசாமி போட்டி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோடு பெருந்துறைத் தொகுதியில் கொங்கு நாடு மக்கள் கட்சியின் சார்பாக முன்னாள் அரசு உயர்அதிகாரியாக இருந்த கே.கோவிந்தசாமி போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சாதிக் கட்சிகளில் ஒன்று கொங்குநாடு மக்கள் கட்சி. இந்தக் கட்சியில்கவுண்டர்கள் அதிகம் உள்ளனர்.
இந்தக் கட்சிக்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பெருந்துறை தொகுதியை தேசிய ஜனநாயகக் கூட்டணிஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தத் தொகுதியில் இப்போது முன்னாள் போலீஸ் எஸ்.பி.யாக இருந்த கோவிந்தசாமி போட்டியிடுகிறார்.கோவிந்தசாமி, தனது பதவி காலத்தில் சிறப்பான சேவைக்காக குடியரசுத் தலைவரின் தங்கப்பதக்கம் பெற்றவர்என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications