இந்திய போர் விமானங்கள் ஊடுருவல்: வங்கதேசம் புகார்
டாக்கா:
வங்கதேச எல்லைக்குள் இந்திய விமானப் படை விமானங்கள் ஊடுருவியதாக அந் நாட்டு விமானப் படை குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து இந்தியாவிடம் கண்டனம் தெரிவிக்கப் போவதாக அந் நாடு கூறியுள்ளது.
இந் நிலையில் இந்திய வீரர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டது குறித்து அதிர்ச்சி அடைந்துள்ள பிரதமர் வாஜ்பாய்இது குறித்து வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் தொலைபேசியில் பேசத் திட்டமிட்டுள்ளார்.
மொத்தம் 16 இந்திய வீரர்களை வங்கதேச ரைபிள்ஸ் படையினரும் வங்கதேச பொது மக்களும் சேர்ந்துகொன்றனர். இதில் 15 வீரர்களின் உடல்களை சிதைத்து இந்தியாவிடம் கொடுத்துள்ளது வங்கதேசம்.
இன்னொரு வீரரின் உடலை இன்று வழங்கவுள்ளது.
முன்னதாக தங்களை சுட்ட வங்கதேச ரைபிள்ஸ் படையினர் மீது இந்திய பி.எஸ்.எப். வீரர்கள் திருப்பி சுட்டதில் 3வங்கதேச வீரர்கள் பலியாயினர்.
வியாழக்கிழமை முதல் எல்லையில் அமைதி நிலவுகிறது. ஆனாலும் தொடர்ந்து பதற்றம் காணப்படுகிறது.