For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லையிலேயே எரியூட்டப்பட உள்ள வீரர்களின் உடல்கள்

By Staff
Google Oneindia Tamil News

மாண்கசார் (இந்திய-வங்கதேச எல்லை):

வங்கதேசம் ஒப்படைத்த 15 இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் (பி.எஸ்.எப்.) உடல்களும் எல்லைக்குஅருகிலேயே எரியூட்டப்பட உள்ளன.

இன்றே (சனிக்கிழமை) அவை எரியூட்டப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்படும். எல்லைப் பாதுகாப்புப்படையின் டைரக்டர் ஜெனரல் குருசரண் ஜகத் உள்பட மூத்த அதிகாரிகள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்வர்.

மொத்தம் 18 பி.எஸ்.எப். படையினரை வங்கதேச ரைபிள்ஸ் படையினரும், 2000 பேர் கொண்ட வங்கதேசக்கும்பலும் தாக்கியது. இதில் 16 பேர் அடித்தும் துன்புறுத்தப்பட்டும் கொல்லப்பட்டனர். 2 பேர் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 15 பேரின் உடல்களை வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையான வங்கதேசரைபிள்ஸ் ஒப்படைத்துவிட்டது. மேலும் ஒரு வீரரின் உடலை அந் நாடு ஒப்படைக்கவுள்ளது.

இதற்கிடையே வங்கதேச ரைபிள்ஸ் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மேகாலயா மாநில கிராமம்மீட்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியப் படையினர் தான் தங்கள் நாட்டுப் பகுதியை ஆக்கிரமித்திருந்ததாகவங்கதேசம் கூறி வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X