For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மா வழியில் சேடப்பட்டி முத்தையா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஊழல் வழக்கில் ஜெயலிலதாவைப் போல தண்டனை பெற்றுள்ள முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா,சேடப்பட்டி தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா அமைச்சரவையில் சபாநாயகராகவும், அமைச்சராகவும் இருந்தவர் சேடப்பட்டி முத்தையா.சபாநாயகராக தன்னை நியமித்ததற்காக சட்டசபையிலேயே ஜெயலலிதாவின் காலில் விழுந்து தமிழகத்தின்மானத்தை கப்பல் ஏற்றியவர்.

சொத்துக் குவித்து, பெரும் ஊழலில் சிக்கி, குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர். ஆனாலும், இவர்தற்போது தேர்தலில் போட்டியிடவுள்ளார். அதிமுகவிலிருந்து தூக்கி எறியப்பட்டுவிட்டதால் சுயேச்சையாகநிற்கிறார்.

தனது சொந்த ஊரான சேடப்பட்டி அமைந்துள்ள சேடப்பட்டி சட்டசபைத் தொகுதியில் திங்கள்கிழமை அவர் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ஜெயலலிதாவின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டால் எனது மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

இல்லாவிட்டால், எனது மனுவும் நிராகரிக்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X