For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜெ. வேட்பு மனு தள்ளுபடி: அதிர்ச்சியில் அதிமுக தொண்டர் சாவு
பொள்ளாச்சி:
ஜெயலலிதா வேட்பு மனுக்கள் தள்ளுபடியான செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிமுக கிளைத் தலைவர் மாரடைப்பால்உயிரிழந்தார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியையடுத்த ஒரக்காளியூரைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (42). இவர் இந்தப் பகுதி அதிமுக கிளைத்தலைவராக இருந்தார். இவர் நேற்று டி.வி பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது 4 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் வேட்பு மனு தள்ளுபடியானது என்ற செய்தியைக் கேட்டார். இதனைக் கேட்டஅவர் அதிர்ச்சியில் அங்கேயே மயங்கி விழுந்து இறந்தார்.
கூலித் தொழிலாளியான இவருக்கு பழனாள் என்ற மனைவியும், செந்தில், பஞ்சலிங்கம் என்ற மகன்களும் உண்டு.
அவர் இறந்த செய்தியறிந்த கிணத்துக்கடவு அதிமுக வேட்பாளர் தமோதாரன், ஒன்றியச் செயலர்கள், மாவட்டச் செயலர்கள்அஞ்சலி செலுத்தினர்.
Comments
parties admk karunanidhi jayalalitha actress stalin ramdoss pmk mdmk vaiko election political actor tamilnadu poes garden rajinikanth
Story first published: Wednesday, April 25, 2001, 5:30 [IST]