"அம்மா மனு நிராகரிப்பு .. தொண்டர்கள் மொட்டை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், சோகமடைந்தநாகர்கோவில் அதிமுக தொண்டர்கள் 3 பேர் மொட்டை போட்டுள்ளனர்.
நாகர்கோவிலைச் சேர்ந்தவர்கள் ரவி, பரணி மற்றும் கண்ணன். தீவிர அதிமுகதொண்டர்களான இவர்கள் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் 4 தொகுதிகளிலும்நிராகரிக்கப்பட்ட தகவல் அறிந்தவுடன் வருத்தமடைந்தனர்.
தேர்தல் கமிஷனின் முடிவைக் கண்டித்து 3 பேரும் தங்களது தலை முடியை மழித்துக்கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மொட்டை அடித்த அவர்கள் மீசையைமட்டும் விட்டு விட்டனர்.
இப்போது, மொட்டைத் தலையுடன், மீசையுடன் ஜெயா டிவியில் வரும் அரிகிரிஅசெம்பிளியில் வரும் அரியின் பாணியில் வித்தியாசமான கெட்டப்பில் ஏரியாவைவலம் வருகிறார்கள் இவர்கள்.












Click it and Unblock the Notifications