நாங்கள் நினைத்தது நடந்துவிட்டது: பாஜக
புதுதில்லி:
ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் அதிமுக கூட்டணியின்வெற்றி பாதிக்கப்படும் என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில்,
ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அவர் இனிமேல்தனது கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்த முடியாது.
நாங்கள் என்ன நடக்கும் என்று எதிர்பார்த்தோமோ, அது நடந்து விட்டது.
வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, தேர்தலில் போட்டியிடும் தகுதியைஇழந்துவிடுவோம் என்று நன்கு உணர்ந்த பிறகும் அவர் நான்கு தொகுதிகளில்வேட்புமனு தாக்கல் செய்ததுதான் வியப்பாக உள்ளது என்றார்
பாஜகவின் தமிழகத் துணைத் தலைவர் வைத்தியலிங்கம் கூறியதாவது:
மக்களைக் குழப்புவதற்காகத்தான் மேலும் 2 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை.
தமிழக அரசியல் வானைக் களங்கப்படுத்த ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள்தோல்வியடைந்து விட்டன என்பதைத்தான் மனுக்கள் தள்ளுபடியானதுசுட்டிக்காட்டுகிறது என்றார்.