நிராகரிக்கப்பட்ட வேட்புமனு மீண்டும் ஏற்பு
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி பாமக வேட்பாளரின் மனு தள்ளுபடிசெய்யப்பட்டு, பிறகு மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ராதாபுரம் தொகுதியில் பாமக சார்பில் ஜோதி வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.
ஜோதிக்கு அவருடைய சொந்த ஊரான ஆவரைக்குளத்திலும், தற்போது குடியிருக்கும்வள்ளியூரிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது.
இதனால் அவருடைய வேட்புமனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று சுயேட்சைவேட்பாளர் ஆறுமுகம் தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தார்.
இதையடுத்து ஜோதியின் வேட்புமனுவைத் தள்ளுபடி செய்வதாக ஆங்கிலத்தில்எழுதிவிட்டார் தேர்தல் அதிகாரி.
உடனே தன்னுடன் வந்தவர்களிடம் பி.எச்.பாண்டியனுக்கு போன் போடு, முருகேசன்எம்பிக்குப் போன் போடு என ஜோதி சொல்லிக் கொண்டிருந்தார்.
பின்னர், திடீரென தள்ளுபடி செய்யப்பட்ட ஜோதியின் வேட்புமனுவை, ஏற்பதாக கடிதம்கொடுத்தார் தேர்தல் அதிகாரி. இதையடுத்து அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இக்கடிதம் பெரும் சட்டச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தேர்தல் அதிகாரி வேட்புமனுக்களைப் பரிசீலனை செய்வதற்கு முன் யாரிடம்வேண்டுமானாலும் கருத்து கேட்கலாம். ஆனால் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டபிறகு அந்த மனுவை மீண்டும் ஏற்றுக் கொள்ளக்கூடாது என எதிர்த் தரப்பினர் வாதம்செய்கின்றனர்.












Click it and Unblock the Notifications