எல்லாம் ஊழல் மயம் !
Subscribe to Oneindia Tamil
கோவை:
எல்லா நிலைகளிலும் ஊழல் வந்து விட்டதால் பொருளாதாரத்தை உலகமயமாக்குவதை எதிர்க்க யாரும் முன்வரவில்லை எனவருந்துகிறார் சிபிஐ (எம்.எல்) கட்சியின் அகில இந்திய செயலர் கே.என் ராமச்சந்திரன்.
கோவையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
இந்தியாவில் எல்லா நிலைகளிலும் ஊழல் அதிகரித்து விட்டது. இந்த ஊழல் பெருகியதால் தான் உலகமாயமக்கல் கொள்கைக்குஎவ்வித எதிர்ப்பும் இல்லை. ஊழலை ஒடுக்க வேண்டுமானால் உலகமயமாக்கலை எதிர்க்க வேண்டும். இதை அரசியல்வாதிகள்யாரும் செய்யப்போவதில்லை.
இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பட்ஜெட் கூட எவ்வித விவாதம் இல்லாமல் நிறைவேறியுள்ளது. காங்கிரஸ் பாரதியஜனதாக் கட்சி இரண்டுமே உலகமயமாக்கலை ஆதரித்து இந்தியாவின் பொருளாதாரக் கதவைத் திறந்து விட்டு விட்டது என்றார்.












Click it and Unblock the Notifications