அழியாத மை வந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தல் வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் கையில் இடப்படும் அழியாத மை,மைசூர் நகரிலிருந்து சென்னைக்கு வந்துள்ளது.
மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கி இதுகுறித்து செய்தியாளர்களிடம்பேசுகையில், மைசூரிலிருந்து அழியாத மை வந்து விட்டது. உரிய நேரத்தில் அவைதமிழகம் முழுவதிலும் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
வாக்குச்சீட்டுக்கள், வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான தஸ்தாவேஜுகள் மற்றும் பிறபொருட்கள் அச்சடிக்கும் பணி அரசு அச்சகங்களில் 27-ம் தேதி தொடங்கும். 26-ம்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் முடிவாகி விடும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications