சட்ட நிபுணர்களுடன் ஜெ. ஆலோசனை
மதுரை:
வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தகட்டநடவடிக்கையாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்ஜெயலலிதா.
மதுரை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஜெயலலிதா, நிருபர்களுக்குப்பேட்டியளித்த போது,
தனிப் பெரும்பான்மை பெறும் அளவிற்கு அதிமுகவின் தேர்தல் வெற்றிவாய்ப்புமிகவும் பிரகாசமாக உள்ளது.
அதிமுக தொண்டர்கள் உணர்ச்சிபூர்வமாக உள்ளனர். உயிரைக் கொடுத்தாவதுஅதிமுகவை வெற்றிபெறச் செய்வதற்காக அவர்கள் கடுமையாக உழைத்துவருகின்றனர்.
என்னுடைய வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து சட்ட நிபுணர்களின்கருத்துக்களைக் கேட்டிருக்கிறேன்.
கூட்டணிக் கட்சியினர் இதயப்பூர்வமாக எங்களை ஆதரித்து வருகின்றனர் என்றார்அவர்.
காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்வாரா என்றுநிருபர்கள் கேட்டதற்கு அதுபற்றி எனக்குத் தெரியாது என்றார்.
இப்போது உங்களது அணியில் முதல்-அமைச்சருக்கான வேட்பாளர் யார் என்றநிருபர்களின் கேள்விக்கு ""நான்தான்"" என்று பதிலளித்தார் ஜெயலலிதா.