அ.தி.முக உறுப்பினரானார் ஜான் பாண்டியன்
சென்னை:
தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி அ.தி.மு.கவின் தேர்தல் சின்னத்தின் கீழ்போட்டியிடுவதற்காக, அக்கட்சியின் உறுப்பினராக தன்னைப் பதிவு செய்துகொண்டுள்ளார் தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன்.
தேர்தல் கமிஷன் விதிமுறைகளின்படி அங்கீகாரம் பெற்ற கட்சியின் சின்னத்தின் கீழ்போட்டியிட விரும்புபவர்கள் அக்கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். பிறகட்சிகளைச் சேர்ந்தவர்கள், பிற கட்சிகளின் சின்னத்தின் கீழ் போட்டியிட முடியாது.
இந்த விதிமுறை காரணமாக தி.மு.க கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில்போட்டியிடுவதாக இருந்த எம்.ஜி.ஆர் கழகம் கட்சி இப்போது தனிச் சின்னத்தில்போட்டியிடவுள்ளது.
இந்த புதிய விதிமுறையால் தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன்பாதிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.கவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடமுடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினராக அவர் தன்னைப் பதிவு செய்துகொண்டுள்ளார். இதன் மூலம் இரட்டை இலைச் சின்னத்தின் கீழ், அ.தி.மு.கவேட்பாளராக அவர் எழும்பூர் (தனி) தொகுதியில் போட்டியிடவுள்ளார்.












Click it and Unblock the Notifications