அதிமுகவுக்கு கர்நாடக முதல்வர் கிருஷ்ணா பிரச்சாரம்
பெங்களூர்:
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யகர்நாடக முதல்வர் கிருஷ்ணா முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணா கூறுகையில்,
தண்டனை என்பது நிரந்தர தீர்ப்பல்ல. அப்பீல் செய்யும் வாய்ப்புக்கள் நிறையஇருக்கின்றன. ஒரு வழக்கில் தண்டனை பெற்றுவிட்டார் என்பதற்காக யாரையும்விமர்சிப்பது சரியல்ல.
ஜெயலலிதாவின் அனைத்து வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது தேர்தல்கமிஷன் எடுத்த முடிவு. இதை எதிர்த்து அப்பீல் செய்யலாம். சரியான இடத்தில் இந்தவிஷயத்தை ஜெயலலிதா கிளப்புவார்.
தேர்தல் பிரச்சாரத்தில் முழு மூச்சுடன் ஈடுபட ஜெயலலிதாவுக்குச் சுதந்திரம்கிடைத்துள்ளது.
அவருடைய வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அதிமுக-காங்கிரஸ்கூட்டணியின் வெற்றி பாதிக்காது.
தமிழகத்தில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வருமாறுதமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து இந்தக் கூட்டணிக்காக பிரச்சாரம் செய்யவுள்ளேன். ஆனால் இதற்கானதேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார் கிருஷ்ணா.












Click it and Unblock the Notifications