ஜெ.க்குப் பாடம் புகட்டுங்கள்: கருணாநிதி
வேலூர்:
இன்னும் ஆணவம், அகம்பாவம் குறையாத ஜெயலலிதாவுக்கு நன்றாகப் பாடம்புகட்டுங்கள் என்று தமிழக முதல்வர் மக்களைக் கேட்டுக் கொண்டார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கருணாநிதிபேசிய போது,
திமுக ஆட்சியில் அனைத்து வகையான மக்களுக்கும் நன்மை செய்யும் பொருட்டுநல்ல பல திட்டங்களைத் தீட்டி, நிறைவேற்றி இருக்கிறோம்.
ஆனால் முந்தைய அதிமுக ஆட்சியிலோ எந்தத் திட்டமும் நடக்கவில்லை. ஒப்பிட்டுப்பார்த்தால் யாருக்கு ஓட்டுப் போடுவது என்று உங்களுக்கே தெரியும்.
அன்று கஜானா பணம் எல்லாம் போயஸ் தோட்டக் கஜானாவுக்குச் சென்றது.அதனால்தான் திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை.
இன்றோ எல்லாப் பணமும் கோட்டை கஜானாவுக்குச் சென்றதால், அனைத்துப்பணிகளும் நன்றாக நடந்தன.
திமுகவினர் தேர்தல் கமிஷனுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து வருகின்றனர்.தேர்தல் கமிஷன் தன்னிச்சையாகத் தனிப்பட்ட ஸ்தாபனமாக செயல்பட்டு வருகிறது.அப்படிப்பட்ட தேர்தல் கமிஷனின் உத்தரவை உதாசீனப்படுத்துவதா?
"நானே முதல்-அமைச்சர் ஆவேன்" என்கிறார் ஜெயலலிதா. இது தேர்தல் கமிஷனைக்காலில் போட்டு மிதிப்பது போல் ஆகும்.
இன்னும் ஜெயலலிதாவுக்கு ஆணவம், அகம்பாவம் குறையவில்லை. அவர்எல்லையைக் கடந்து அத்துமீறிச் செல்கிறார். இப்படிச் செல்வது ஆபத்தில்தான் முடியும்.
இதை நான் எச்சரிக்கையாகச் சொல்லவில்லை. அன்போடு அறிவுரையாகத்தான்சொல்கிறேன்.
அவரைத் திருத்த பொதுமக்களாகிய நீங்கள்தான் பாடம் புகட்ட வேண்டும் என்றுபேசினார் கருணாநிதி.