காதலியைக் கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை
புஜாங்கனூர்:
காதலியை வெட்டிக் கொலை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை அருகே உள்ள புஜங்கனூரைச் சேர்ந்தவர் ரங்கசாமி (75). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த பாக்கியம் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது.பாக்கியத்திற்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
இருவரும் பத்து ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந் நிலையில் ரங்கசாமிக்கும், பாக்கியத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பின்னர், இவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் மீண்டும் இணைந்து வாழ ரங்கசாமி, பாக்கியத்தை வற்புறுத்தி வந்துள்ளார். பாக்கியமோமறுத்துள்ளார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த ரங்கசாமி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் தேதி பாக்கியத்தை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார் . இதையடுத்துபோலீசார் வழக்கப் பதிவு செய்து வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்து வந்த முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் வாசுகி, ரங்கசாமிக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications