லாரி கவிழ்ந்து 3 பெண்கள் பலி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோடு அருகே செங்கல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் 3 பெண்கள் அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே ஒரு லாரி செங்கல் ஏற்றிக் கொண்டு பருவாச்சி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.அப்போது எதிரே ஒரு டிராக்டர் வந்து கொண்டிருந்தது.
டிராக்டரின் மீது மோதாமல் இருக்க லாரி டிரைவர் வண்டியைத் திருப்ப முயன்றார். அப்போது லாரி எதிர்பாராதவிதமாக அருகில்இருந்த குழியில் விழுந்தது. இதனால், அதில் அமர்ந்திருந்த பெண்களும் கிழே விழுந்தனர்.
அவர்கள் மீது லாரியில் இருந்த செங்கல்கள் சரிந்தன. இதில் 3 பேர் அதே இடத்தில் நசுங்கி இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications