For Daily Alerts
Just In
ரஷ்ய ஏவுகணை இந்தியாவில் சோதனை
புதுதில்லி:
இந்தியா விமானப் படையின் விமானியில்லா இயங்கும் தாக்குதல் விமானமான"லக்ஷ்யா" மூலம், ரஷ்யாவின் "க்யூ.எஸ்.ஏ" ஏவுகணை ஒரிஸ்ஸாவின் சண்டிப்பூர்சோதனைத் தளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு இச்சோதனை நடந்ததாக பாதுகாப்புத்துறைஅமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
"லக்ஷ்யா" விமானம் கடந்த ஆண்டுதான் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டது.
ரஷ்ய ஏவுகணையை ஏவுவதற்கு இந்திய விமானம் பயன்படுத்தப்பட்டிருப்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Thursday, April 26, 2001, 5:30 [IST]