பரிசீலனையில் இருக்கும் 60,000 H1-B
டெல்லி:
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தேக்கத்தால் அந் நாட்டில் தகவல்தொழில் நுட்ப வல்லுனர்களின் தேவை குறைந்துவிட்டது என இந்தியநாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்தது.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் நாடாளுமன்றத்தில்கூறுகையில், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றத்தால் பல அமெரிக்கநிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன.
பொருளாதார மாற்றத்தால் அமெரிக்க நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பவல்லுனர்களின் தேவையும் குறைந்துவிட்டது.
இதில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவிலிருந்து சென்ற தகவல்தொழில்நுட்ப வல்லுனர்கள்தான். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் ஆட்குறைப்புசெய்தததில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் எச்-1-பி விசா வைத்திருந்தவர்கள்தான்.எச்-1-பி விசா வைத்திருந்தவர்களில் 40 முதல் 50 சதவிகிதத்தினர் இந்தியர்கள்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை 72,000 பேருக்கு எச்-1-பி விசாவழங்கப்பட்டுள்ளது. இன்னமும் 60,000 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளனஎன்றார்.
முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட்டு வந்த எச்-1-பி விசாக்களின் எண்ணிக்கைலட்சக்கணக்கில் இருந்தது. தற்போது அது குறைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.