புவனகிரியில் சுயேச்சைக்கு அ.திமு.க ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டசபைத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளரின்வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால், அத்தொகுதியில் சுயேச்சைவேட்பாளருக்கு ஆதரவு தருவதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.

புவனகிரி தொகுதியில் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த வேட்பு மனு தள்ளுபடிசெய்யப்பட்டுவிட்டது. மாற்று அ.தி.மு.க. வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்திருந்தகருணாநிதி, ராமஜெயம் ஆகியோரின் வேட்பு மனுக்களுடன், அ.தி.மு.க.தலைமையகத்திடமிருந்து அத்தாட்சி கடிதம் இணைக்கப்படாததால் அவர்களதுமனுக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டது.

இதையடுத்து புவனகிரி தொகுதியில் அ.தி.முக. போட்டியிட முடியாத நிலைஏற்பட்டு விட்டது. இந்த நிலையில், எஸ்.அருள் என்ற சுயேச்சை வேட்பாளருக்குஅ.தி.மு.க .ஆதரவு தருவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், புவனகிரி தொகுதியில் அ.திமு.க.வேட்பாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டு விட்டது.

எனவே சுயேச்சை வேட்பாளர் எஸ்.அருளை அ.தி.மு.க. ஆதரிக்கிறது. அருளுக்குவழங்கப்படும் சின்னத்திற்கு ஆதரவாக அ.தி.மு.கவினர் தீவிர பிரசாரம் செய்துஅவருக்கு வெற்றி தேடித் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

புவனகிரி தொகுதியில் மக்கள் தமிழ் தேசம் சார்பில், இந்தியன் வங்கியின் முன்னாள்தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+