For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மறைந்த வேட்பாளர் குடும்பத்தை தத்தெடுத்த வைகோ

By Staff
Google Oneindia Tamil News

திருவாரூர்:

திருவாரூர் தொகுதியில் மதிமுக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த சில மணிநேரங்களிலேயே மரணமடைந்த குமரேசனின் குடும்பத்தை மதிமுக தத்தெடுத்துக்கொள்ளும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

இதுகுறித்து, அத்தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்துவரும் வைகோ கூறுகையில்,

குமரேசனது உயிர் பிரிந்த செய்தி நான் திருச்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தபோதுதெரிவிக்கப்பட்டது.

செய்தி கேட்டு என் உள்ளம் படபடத்தது. இரவோடு இரவாக குமரேசன் உடலுக்குநேரில் வந்து அஞ்சலி செலுத்தினேன்.

கடந்த மாதம் குடவாசலில் நடைபெற்ற மதிமுக நிதியளிப்புக் கூட்டத்திற்கு நான்வந்தபோது, குமரேசனது உழைப்பைக் கண்ணாறக் கண்டு மகிழ்ந்தேன்.

முதற்கட்டமாக குமரேசன் குடும்பத்தாருக்கு மதிமுக சார்பில் ரூ.50,000வழங்கப்படுகிறது.

அவரது மூத்த மகனுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்வோம். இளையமகனது படிப்புக்குத் தேவையான செலவையும் மதிமுக ஏற்றுக் கொள்ளும்.அவருடைய மகள்களின் திருமண ஏற்பாட்டைத் தேர்தலுக்குப் பின் மதிமுக ஏற்றுநடத்தும் என்றார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X