தேர்தல் விளம்பரம் எழுத மறுத்தவருக்கு கத்திக்குத்து
சென்னை:
தேர்தல் சுவர் விளம்பரத்தை எழுத மறுத்த ஓவியர் கத்தியால் குத்தப்பட்டார்.
சென்னை எழும்பூர் பெருமாள் ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த ராஜா (33). சுவர்களில் விளம்பரம் எழுதும்தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
இவரிடம் தமிழ்நாடு தேவர் விடுதலை சிங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்து, சுவர் விளம்பரம் எழுதித்தரும்படி கேட்டுள்ளனர். அப்போது அவர்களிடம், தனக்கு ஏராளமான வேலைகள் இருப்பதால், எழுதித் தரஇயலாது என்று கூறியுள்ளார் ஆனந்த ராஜா.
இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விளம்பரம்கேட்டு வந்த கோஷ்டியினர் தங்களிடமிருந்த கத்தியால், ஆனந்த ராஜாவை சரமாரயாகக் குத்தினர்.
இதைத் தொடர்ந்து ஆனந்த ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் போலீஸில் கொடுத்தபுகாரின்பேரில் செல்லத்துரை, அந்தோணி, அமுதன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications