ஈரோட்டில் கருணாநிதி- ஜெயலலிதா
ஈரோடு:
ஈரோட்டில் இன்று இரு ""அரசியல் துருவங்கள் சந்திக்கின்றன.
தமிழகத் தேர்தல் சூடு பிடித்திருக்கும் இந் நேரத்தில் ஒரே நகரில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் இன்று ஈரோடு வருகின்றனர்.அங்கேயே தங்குகின்றனர். இதையடுத்து ஈரோட்டில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று அதிமுக அணியின் தலைவி ஜெயலலிதா தீவிரப் பிரச்சாரம் செய்கிறார். இந்தமாவட்டத்தில் சூலூர், பல்லடம், பொங்கலூர், திருப்பூர், கிணத்துக்கடவு, மேட்டுபாளையம் வரை ஜெயலலிதா பிரச்சாரம்மேற்கொள்கிறார்.
பின்னர் மேட்டுப்பாளையத்திலிருந்து கோபி, சித்தோடு வழியாக ஈரோடு சென்றடைகிறார் ஜெயலலிதா. வெள்ளிக்கிழமை இரவுஈரோட்டில் அவர் தங்குகிறார்.
அதேசமயம், திமுக அணித் தலைவர் கருணாநிதி, சேலத்தில் தற்போது பிரச்சாராத்தை முடித்துக் கொண்டு திண்டல், காங்கேயம்,வெள்ளகோயில், முத்தூர், கரூர் வழியாக இரவு ஈரோடு வந்தடைகிறார். வெள்ளியிரவில் அவரும் ஈரோட்டில் தங்குகிறார்.
ஒரே நகரில் இரு பெரும் அரசியல் தலைவர்கள் தங்குவதால், போலீசார் அச்சத்தில் உறைந்துள்ளனர். தொண்டர்களுக்குள் எதுவும்மோதல் வந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனத்துடன் செயலாற்றி வருகின்றனர்.
போலீஸ் பாதுகாப்பு நகரில் பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications