நியூஜெர்சி தேர்தலில் போட்டியிடும் இந்தியர்
நியூயார்க்:
அமெரிக்காவின் நியூஜெர்சி அசெம்பிளிக்கு நடைபெறவுள்ள தேர்தலில், அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியர்ஒருவர் போட்டியிடுகிறார்.
கேரளாவைப் பிறப்பிடமாகக் கொண்ட சில்வஸ்டர் ஃபெர்னாண்டஸ் (வயது 52) குடியரசுக் கட்சி சார்பாகப்போட்டியிடுகிறார்.
சாஃப்ட்வேர் ஆலோசகரான ஃபெர்னாண்டஸ், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவில் வாழும்ஆசியர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் அளிக்கப்போவதாகக் கூறியிருக்கிறார்.
நியூஜெர்ஸியில் வியாபாரம் தொடங்க விருப்பமுள்ள ஆசிய அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு நிறைய சலுகைகளைஅளிக்கப்போவதாகவும் அவர் கூறுகிறார்.
எடிசன் நகரில் வாழ்ந்து வரும் ஃபெர்னாண்டஸ், கடந்த 1999-ல் நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.
இந்தியர்களும் ஆசியர்களும் அதிகமாக வாழும் ஃப்ராங்க்ளின் நகரம் தற்போது தன்னுடைய தொகுதியின்கீழ்வருவதால், இம்முறை வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் என்கிறார் அவர்.
நியூ ஜெர்ஸியில் வாழும் இந்தியர்கள் எப்போதும் குடியரசுக் கட்சிக்கு ஆதரவளித்து வந்துள்ளனர் என்று கூறும்ஃபெர்னாண்டஸ், சிறுபான்மையினருக்கு உதவி வரும் கட்சியாகவும், சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றில்அதிக நம்பிக்கையுள்ள கட்சியாகவும் குடியரசுக் கட்சி விளங்குகின்றது என்றார்.
கடந்த மாதம்தான் பிரதீப் கோத்தாரி என்ற அமெரிக்க இந்தியருக்கு மிடில்செக்ஸில் போட்டியிட குடியரசுக் கட்சிவாய்ப்புக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.