குடிநீர் லாரி மோதி தாய், மகள் பலி
சென்னை:
சென்னையில் அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி மோதி தாயும், 3 வயது மகனும் பலியாயினர். இதனால்ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் இறங்கினர்.
சென்னை மேற்கு மாம்பலம் பிருந்தாவன் எக்ஸ்டன்ஷன் பகுதியைச் சேர்ந்தவர் சாய்ராம். இவரது மனைவிரமாபாய் (33). ரமாபாயின் மகள் பவானி (8) அருகிலுள்ள மாநகராட்சி பள்ளியில் படித்து வந்தாள்.
வெள்ளிக்கிழமை காலை பவானி பள்ளிக்கூடம் சென்றாள். பள்ளி முடிந்ததும் அவளை தாயார் ரமாபாய்அழைத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கையில் 3 வயது மகன் பிரசாந்தையும்வைத்திருந்தார்.
வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆரிய கெளடா சாலை மற்றும் துரைசாமி சாலை சந்திப்பில் படுவேகமாக வந்தஒரு தண்ணீர் லாரி, ரமாபாய் மீது மோதியது.
இதில் ரமாபாயும், பிரசாந்த்தும் லாரியில் சிக்கி அங்கேயே உயிரிழந்தனர். பவானி மட்டும் அதிர்ஷ்டவசமாகதப்பினாள். திடீர் என நடந்து விட்ட இந்த விபத்தைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுற்றனர். விபத்துநடந்தவுடன் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
லாரி மோதி தாயும், மகனும் பலியான சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் இறங்கினர்.போலீஸார் வந்து அவர்களைக் கலைந்து போகச் செய்தனர்.
தண்ணீர் லாரிகளும், அரைபாடி செங்கல்- மணல் லாரிகளும், மீன் வண்டிகளும் தான் அதிக அளவில் உயிர்களைஎடுத்து வரும் எமன்களாக சாலைகளில் உலவி வருகின்றன.