For Daily Alerts
Just In
அறுபதிலும் ஆசை வரும்...!
மண்டி:
60 வயது விதவை ஒருவர், இரண்டு மகன்களுக்குத் தந்தையான 35 வயதானவரை மணந்தார்.
இது அமெரிக்காவில் நடந்த சம்பவம் அல்ல. நம்ம நாட்டில் நடந்தது.
இமாச்சலப் பிரதேசம் குலு மாவட்டத்தில் கோர்ட் வளாகத்திலேயே இந்த அதிசயத் திருமணம் நடந்தது.
பொட்டுவைத்துக் கொண்டு சிவப்பு நிற ஆடையை அணிந்து கொள்ளுங்கள் என்று இத் திருமணத்தை நடத்திவைத்த மாவட்ட அதிகாரி கூறிய போது அந்த 60 வயதுப் பெண் ரொம்பவும்தான் வெட்கப்பட்டார்.
தம்பதிகள் இருவரும் வெகு மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
யு.என்.ஐ.
Story first published: Friday, April 27, 2001, 5:30 [IST]