தேர்தல் ஆணையம் இரட்டை வேடம்: காங்கிரஸ் புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயலலிதாவின் வேட்பு மனுவை நிராகரித்தன் மூலம் தேர்தல் ஆணையம் இரட்டைவேடம் போட்டுள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காங்கிரஸ்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
அதன் பின் அவர் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்து கூறுகையில், கேரளாவில் ஊழல்குற்றத்தில் சிறை தண்டனை பெற்ற பாலகிருஷணனின் வேட்புமனுவை ஏற்றுக்கொண்டு. தமிழகத்தில் ஜெயலலிதாவின் வேட்புமனுவை நிராகரித்ததன் மூலம் தேர்தல்ஆணையம் இரட்டை வேடம் போட்டுள்ளது.
இதில் பாலகிருஷண பிள்ளையின் தண்டனை உயர்நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. ஆனால் ஜெயலலிதாவின் வழக்கு இன்னமும் நிலுவையில்தான்உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications