இந்தியாவிற்கு 3 ராக்கெட் என்ஜின்கள்: ரஷ்யா தருகிறது
மாஸ்கோ:
இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றியைத் தொடர்ந்து, மேலும் 3 கிரையோஜெனிக் எஞ்சின்களையும், 5பூஸ்டர் ராக்கெட் செலுத்து கருவிகளையும் இந்தியாவுக்குத் தர ரஷ்யா முன் வந்துள்ளது.
கடந்த 18ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட்-1 செயற்கைக்கோள் குறிப்பிட்டஉயரத்தை எட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.
இந்த ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்ட ரஷ்யாவின் கிரையோஜனிக் எஞ்ஜின் மூலம் போதிய திறன்கிடைக்கவில்லை. இதனால் செயற்கைக்கோளை போதிய உயரத்தில் ராக்கெட் செலுத்தவில்லை. இதனால், 36,000கிலோமீட்டர் உயரத்தில் பூமியை வலம் வரவேண்டிய ஜிசாட்-1 செயற்கைக்கோள் இப்போது 35,000 கிலோமீட்டர்உயரத்திலேயே தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
விண்ணில் நம் நாட்டுக்கு நேராக 24 மணி நேரமும் நிறுத்தப்பட வேண்டிய செயற்கைக்கோள் 23 மணி 2நிமிடங்கள் மட்டுமே நின்று கொண்டிருக்கிறது. மீதி 58 நிமிடங்கள் அது பாதை மாறிவிடுகிறது.
கிரையோஜனிக் ஒரு நல்ல எஞ்சின்தான். இருந்தாலும் இதில் உள்ள இரண்டு ப்ரொப்பல்லன்ட் டாங்குகளில் ஒன்றுமிகவும் பழையதாகும். இதனால் ஏராளமான எரிபொருள் செலவாகிக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், மேலும் 3 கிரையோஜெனிக் எஞ்சின்களையும், 5 பூஸ்டர் ராக்கெட் செலுத்து கருவிகளையும் ரஷ்யாஇந்தியாவுக்குத் தருவதாகக் கூறியிருக்கிறது.
இதன்மூலம் மற்ற நாடுகளின் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான வாய்ப்புகளும் இந்தியாவுக்குஅதிகமாகும்.
அமெரிக்காவின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, ஏற்கனவே நான்கு கிரையோஜெனிக் எஞ்சின்களை இந்தியாவுக்குத்தந்துள்ளது.
யு.என்.ஐ.