For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.மனு தள்ளுபடிக்கும் எனக்கும் தொடர்பில்லை: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

ராசிபுரம்:

ஜெயலலிதாவின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு நான்தான் காரணமா? கொழுப்பெடுத்துப்போய்நான்கு இடங்களில் நானா வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யச் சொன்னேன்? என திமுக தலைவரும்முதல்வருமான கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

ராசிபுரத்தில் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

ஜெயலலிதாவின் நான்கு வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு நான் தான் காரணம் எனச் சொல்லிவருகிறார்.

ஆனால், அவர் கொழுப்பொடுத்துப் போய் நான்கு இடங்களில் மனுக்களைத் தாக்கல் செய்தால், அதுதள்ளுபடியாகமலா இருக்கும். முதல்வர் அரசு சொத்தை வாங்கக் கூடாது என விதிமுறை இருக்கிறது. அப்படிஇருக்கும்போது நானா சொத்தை வாங்கச் சொன்னேன். அதற்காக நீதிமன்றம் சென்றார். தண்டனை பெற்றார்.தேர்தலில் நிற்க முடியவில்லை.

எத்தனை சொத்துக்களை வாங்கினாலும் யார் என்ன செய்யமுடியும் என மார்தட்டிக் கொண்டார். இப்போதும்கூட அதிகாரிகளை ஏமாற்றி, தேர்தல் கமிஷனை ஏமாற்றி, மக்களையும் ஏமாற்ற நினைக்கிறார்.

மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். அப்படி அவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவார்கள் என்றால்,அவர்கள் திமுகவிற்கு வாக்களிப்பாகள் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X