நாமக்கல் தி.மு.க. எம்.எல்.ஏ.சஸ்பெண்டு
சென்னை:
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக நாமக்கல் மாவட்ட தி.மு.க. எல்.எல்.ஏ. சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை தி.மு.க. சட்டசபை உறுப்பினராக இருப்பவர் கே.கே.வீரப்பன். இவர் கட்சியின்கட்டுப்பாட்டை மீறியதற்காக கட்சியிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டம் கபிலர் மலை சட்டசபை உறுப்பினரான கே.கே.வீரப்பன் கழக கட்டுப்பாட்டை மீறியும்,கழகத்திற்கு கெட்டபெயர் ஏற்படும் விதமாகவும் செயல்பட்டு வருகிறார்.
இதனால் அவர் வகித்து வந்த தி.மு.க. உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிமாகநீக்கப்படுகிறார்.
தி.மு.க.தொண்டர்கள் யாரும் அவருடன் எவ்விதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.