மக்கள் தேவையை நிறைவேற்றுவோம் : பாஜக தேர்தல் அறிக்கை
புதுச்சேரி:
நிலையான, நேர்மையான, திறமையான மக்கள் தேவைகளை நிறைவேற்றக் கூடிய அரசு அமைய பாஜக தோள்கொடுக்கும் என்று புதுவை சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .
மத்திய சட்டம், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தேர்தல்அறிக்கையில்:
புதுவை பாஜக ஊழலற்ற ஆட்சி அமைய ஒத்துழைப்பு கொடுக்கும்.
ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமப்புற வளர்ச்சிக்காக சாலைகள் மற்றும் பாலங்கள் மேம்பாடு அடையநடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகள் கடன் அட்டைத் திட்டம் அமல் படுத்தப்படும்.
புதுவைக்கு வரவேண்டிய காவிரி நீரைப் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும்.
காரைக்காலில் தானியக் கொள்முதல் நிலையங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொடுக்க கல்வி நிலையங்கள் புதுவையில் தொடங்கப்படும்.
வரியற்ற வணிக வளாகம் புதுவையில் அமைக்கத் தேவையான முயற்சிகள் எடுக்கப்படும்.
காரைக்காலில் தானியக் கொள்முதல் நிலையங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பிட்ட சில தொழிற்சாலைகளுக்கு மட்டும் கிடைக்கும் குறைந்த விலை மின்சாரம் அனைவருக்கும் கிடைக்கும்வகையில் முயற்சி எடுக்கப்படும்.
புதுவையில் ஊழலற்ற, நிலையான ஆட்சி அமைய புதுவை பாஜக ஒத்துழைப்பு கொடுக்கும்.
மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவுப் பாலமாக புதுவை பாஜக விளங்கி, புதுவையின் வளர்ச்சிக்குப்பாடுபடும் என்று கூறப்பட்டுள்ளது.