For Daily Alerts
Just In
துரோகிகளைத் தூக்கி எறிவோம்: வைகோ அறைகூவல்
கோவை:
துரோகம் செய்தவர்கள், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், தூக்கி எறிவோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோபேசினார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் வைகோ திங்கள்கிழமை தேர்தல் பிரசாரத்தைத் துவக்கினார்.
கோவை மேற்குத் தொகுதியில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து அவர் பேசியதாவது:
கலைஞர் எங்களைப் பார்த்து துரோகி என்கிறார். எதிரிகள் என்று பேசுகிறார். தரம் தாழ்ந்து பேசுகிறார். பவள விழாக் காணும்நீங்கள் இப்படி பேசலாமா? நீங்கள் தான் துரோகி.
எங்களை அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து 10 சீட் கொடுப்போம் 12 சீட் கொடுப்போம் என்று கூறினீர்கள். ஆனால் கிணறுவெட்டப் பூதம் கிளம்பிய கதையாக, தற்போது 213 தொகுதிகளிலும் மதிமுக போட்டியிடுகிறது. இதைக் கண்ட கலைஞருக்கு பயம்வந்து விட்டது.
மதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பின்னர் யாராக இருந்தாலும் அவர்களைத் தூக்கி எறிவோம் என்றார் வைகோ.
Comments
parties admk karunanidhi jayalalitha actress stalin ramdoss pmk mdmk vaiko election political actor tamilnadu poes garden rajinikanth
Story first published: Monday, April 30, 2001, 5:30 [IST]