For Daily Alerts
Just In
தமிழகத்தில் உற்சாகமான உழைப்பாளர் தினம்
சென்னை:
தமிழகம் முழுவதிலும் மே தினக் கொண்டாட்டம் வெகு விமரிசையாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
மே 1ஆம் தேதி உலகம் முழுவதிலும் உழைப்பாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் விமரிசையாக இதுகொண்டாடப்பட்டது.
சென்னையில் பல்வேறு இடங்களில் இதுதொடர்பாகப் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநிலத் துணைச் செயலாளர் தியாகராஜன், வரதராஜன் ஆகியோர் கொடியேற்று விழாவில்கலந்து கொண்டனர்.
நகர் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் செங்கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கி மே தினத்தைக் கொண்டாடினர்.
Comments
Story first published: Tuesday, May 1, 2001, 5:30 [IST]